Powered By Blogger

Friday, February 18, 2011

அட கிடுக்கிப் பிடியின போடும் நீயும் கில்லாடி




பல்லவி

ஆண் :
ஹேய்..
கள்ளி – நீ
கிள்ளி வச்ச மல்லி – தேன்
கொட்டி வச்ச அல்லி – தீ
மூட்டி வச்ச பூஅள்ளி!

பெண்:
ஹேய்..
கத்தி – ஓ
மீச முள்ளு குத்தி – அட
பத்திக் கிச்சு புத்தி – அதில்
பஸ்பம் ஆச்சு தீக்குச்சி!

ஆண்:
நீ வழுக்குற மெழுகுச் சாலை
அட பதுக்குற அழகுச் சோலை
அடி பந்திக்கு வந்த வேளை
நீ நெய் வாழை

பெண்:
நீ இடுப்புல கொத்துச் சாவி
என் மடிப்புல மொத்தம் ஜீவி
அட கிடுக்கிப் பிடியின போடும்
நீயும் கில்லாடி

ஆண்:
அல்லே துல்லே – ஏதோ
ஆகிப்புட்டேன் உன்னாலே
அல்லே துல்லே – ஆசை
முத்திப்போச்சு கண்ணாலே

பெண்:
அல்லே துல்லே – ஏதோ
ஆகிப்புட்டேன் உன்னாலே
அல்லே துல்லே – ஆசை
முத்திப்போச்சு கண்ணாலே

சரணம் - 1

ஆண் :
ஏய்..
முத்தமே – அது
குத்தமா?
உன் அனுமதி இன்றி தரலாமா?
ஆதை ஆடைகள் தாண்டியும் இடலாமா?

பெண் :
அனுமதி
கேட்கும் சாக்கில்
ஆடை தாண்டியும் பார்க்காதே
அட்டைப் பூச்சியாய் ஒட்டாதே!

ஆண் :
நீ வயசுக்கு வந்த கோடை
குளிர் மூட்டியேக் கொல்லும் வாடை
பசு நெய்யில வறுத்த சீடை
என்னை நெருங்கியே நொறுக்காதே!

ஹேய்..
கள்ளி – நீ
கிள்ளி வச்ச மல்லி – தேன்
கொட்டி வச்ச அல்லி – தீ
மூட்டி வச்ச பூஅள்ளி!

பெண்:
ஹேய்..
கத்தி – ஓ
மீச முள்ளு குத்தி – அட
பத்திக் கிச்சு புத்தி – அதில்
பஸ்பம் ஆச்சு தீக்குச்சி!

சரணம் - 2

ஆண் :
ஹேய்..
உப்பமோ? – உடல்
தெப்பமோ?
நான் நீந்தித்தான் குளித்திட வரலாமா?
கை ஏந்திட வைப்பது முறையாமோ!

பெண் :
கையேந்திக்
கேட்டாலும்
கன்னி மனசு கரையாது
கற்புக் கோட்டைத் தாண்டாது

ஆண் :
நீ வயசுக்கு வந்த கோடை
குளிர் மூட்டியேக் கொல்லும் வாடை
பசு நெய்யில வறுத்த சீடை
என்னை நெருங்கியே நொறுக்காதே!

ஹேய்..
கள்ளி – நீ
கிள்ளி வச்ச மல்லி – தேன்
கொட்டி வச்ச அல்லி – தீ
மூட்டி வச்ச பூஅள்ளி!

பெண்:
ஹேய்..
கத்தி – ஓ
மீச முள்ளு குத்தி – அட
பத்திக் கிச்சு புத்தி – அதில்
பஸ்பம் ஆச்சு தீக்குச்சி!

No comments:

Post a Comment