Powered By Blogger

Wednesday, May 19, 2010

கடவுளின் காதல் தேவதை

கடவுளுக்கு தினமும்
இலட்சக் கணக்கில்
குவிகின்றன
காதல் கடிதங்கள்
கோரிக்கைகளாய்..

நீ எழுதாத
ஒரு கடிதத்திற்காக
ஏங்கிக் கொண்டிருக்கிறான்
கடவுள்!
----

கோரிக்கைகளைக் கொட்டிக் கொட்டி
குப்பைக் கூடையாகிவிட்டது
கடவுளின் கருவறை..

நீ வந்து
புன்னகை சிந்து
புனிதமாகட்டும்!
- - - -

உன்னைப் பற்றி
யோசிப்பதே
தியானம்
கடவுளுக்கு!
- - - -
உன்னைப் பார்த்ததிலிருந்து
உன்பேர் சொல்லி
பூஜிக்கச் சொல்கிறான்
பூசாரிகளிடம் கடவுள்..

ஆனால்
யாருக்குமே புரியவில்லை
கடவுளின் மொழி!
- - - -


பூக்களால் அர்ச்சனை செய்பவர்களைவிட
பார்வையால் அர்ச்சனை செய்யும்
உன்னை ரொம்பப் பிடிக்கும்
கடவுளுக்கு!

------

கடவுளுக்கு தினமும்
இலட்சக் கணக்கில்
குவிகின்றன
காதல் கடிதங்கள்
கோரிக்கைகளாய்..

நீ எழுதாத
ஒரு கடிதத்திற்காக
ஏங்கிக் கொண்டிருக்கிறான்
கடவுள்!
----

கோரிக்கைகளைக் கொட்டிக் கொட்டி
குப்பைக் கூடையாகிவிட்டது
கடவுளின் கருவறை..

நீ வந்து
புன்னகை சிந்து
புனிதமாகட்டும்!
- - - -

உன்னைப் பற்றி
யோசிப்பதே
தியானம்
கடவுளுக்கு!
- - - -
உன்னைப் பார்த்ததிலிருந்து
உன்பேர் சொல்லி
பூஜிக்கச் சொல்கிறான்
பூசாரிகளிடம் கடவுள்..

ஆனால்
யாருக்குமே புரியவில்லை
கடவுளின் மொழி!
- - - -


பச்சைக் குழந்தைக்கு
நிலவைக் காட்டி
சோறு ஊட்டும்
தாயைப் போல..

காதலைக் காட்டி
முத்தம் ஊட்டுகிறாய்
நீயெனக்கு!

காதல் பசி கூடுகிறது!
----

பூக்களால் துடைப்பாயோ
உன் இதழை
இவ்வளவு மென்மையாக உள்ளது.

----