கடவுளுக்கு தினமும்
இலட்சக் கணக்கில்
குவிகின்றன
காதல் கடிதங்கள்
கோரிக்கைகளாய்..
நீ எழுதாத
ஒரு கடிதத்திற்காக
ஏங்கிக் கொண்டிருக்கிறான்
கடவுள்!
----
கோரிக்கைகளைக் கொட்டிக் கொட்டி
குப்பைக் கூடையாகிவிட்டது
கடவுளின் கருவறை..
நீ வந்து
புன்னகை சிந்து
புனிதமாகட்டும்!
- - - -
உன்னைப் பற்றி
யோசிப்பதே
தியானம்
கடவுளுக்கு!
- - - -
உன்னைப் பார்த்ததிலிருந்து
உன்பேர் சொல்லி
பூஜிக்கச் சொல்கிறான்
பூசாரிகளிடம் கடவுள்..
ஆனால்
யாருக்குமே புரியவில்லை
கடவுளின் மொழி!
- - - -