Powered By Blogger

Saturday, February 18, 2012

இயக்குனர் Kbb.நவீன் அவர்களின் “நிக்கோடின் குச்சிகள்”



நிக்கோடின் குச்சியும் யானையும்


புகைத்தல் என்பது புலன்களைப் புத்துணர்ச்சியாக்கும் ஒரு துன்ப நிவாரணி. சுமார் கி.மு.5000 ஆண்டுக்கு முன்னமே உலக நாடுகளில் தன் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தது புகையிலை. இடத்திற்கு இடம் புகைத்தலின் தன்மையும் வழிமுறைகளும் மாறுபடுகின்றன. ஓரிடத்தில் புனிதமானது என்றும், மற்றோரிடத்தில் பாவமானது என்றும், வேறொரிடத்தில் நவீனமானது என்றும், பிரிதோரிடத்தில் சுகாதாரக் கேடானது என்று கருதப்பட்டாலும் புகைத்தல் என்பது இன்றும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. 

இயக்குனர் Kbb.நவீன் அவர்களின் “நிக்கோடின் குச்சிகள்” என்னும் தலைப்பை வாசிக்கும் பொழுதே நவீனத்தின் வீச்சு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டுமென்று புரிந்துவிடுகிறது. ஆயினும் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் நவீன கவிதையின் கட்டுமானத்தில் அமைந்தவை அல்ல என்றாலும் கூட,பாடுபொருள்கள் யாவையும் நம்மைச் சார்ந்தவர்களுக்கு நிகழ்ந்தவையாகவும் நிகழ்ந்து கொண்டிருப்பவையாகவும் மனதை வசப்படுத்துகிறன. சமூகம் சார்ந்த உணர்வுகளும்; வாழ்வியல் சார்ந்த உணர்வுகளும் வார்த்தைகளாளய் விரிகின்றன.

தொகுப்பின் முதல் கவிதையிலேயே நம்மை ஈர்த்து விடுகிறார். குழந்தைகளின் உலகம் கொண்டாட்டங்கள் நிறைந்தவையே. ஆனால் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை அக்கொண்டாட்டம். அடிப்படைக் கல்வி கூட அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு வாய்க்கப்படாததை எண்ணும்போது வேதனையே மிஞ்சுகிறது. யதார்த்த வாழ்வியலின் வலியை சொல்வர்ணம் பூசாமல் இயல்பாக எடுத்துரைக்கிறார்.
குழந்தைத் தொழிலாளர்
ஒழிப்புத் திட்ட மாநாடு..
மாநாட்டுப் பந்தலில்
 கடலை முறுக்கு விற்றனர்
சிறுவர்கள்!
*

நவீனம் குறித்த ஒவ்வொருவருக்கும் பல்வேறு கருத்து நிகழ்ந்த போதிலும் நவீனத்துவம் எல்லோர் வாழ்விலும் நிரம்பியதாகவே இருக்கிறது. பொதுவாகவே பழமை கட்டுக்குள் அடங்கிக் கிடப்பதை விரும்புவதில்லை நம் ஆழ்மனங்கள். ஓவ்வொரு நொடியும் வீரியமிக்க புதுமைகளை நோக்கிச்; செல்லும் பொழுது மனதின் வேகம் விவேகமிக்கதாகிறது.

நவீன கவிதைகள் குறித்து யோசிக்கும் பொழுதும் வாசிக்கும் பொழுதும் சொற்கட்டுமானத்தில் கண்ணாடி மாளிகை போல் புதுமைகள் நிகழ்ந்தபோதிலும் பலருக்குப் புரியாதவையாகவே புலப்படுகிறன. நவீன கவிதை குறித்த தன் ஆதங்கத்தை இத்தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார்.
நான் எழுதத் தயங்கும்  
பாலியல் குறித்த கவிதைகள்தான்   
அவனுக்கும் கவிதைகளே..

சத்தியமாய் சொல்கிறேன்
அவனது கவிதைகள் எதுவுமே  
இன்றுவரை புரிந்ததில்லை..

 இருப்பினும் அவனை   
இலக்கிய உலகம்  
மாபெரும் கவிஞனென கொண்டாடுகிறது..

 ஒருவேளை எவனுக்கும் புரியாமல் 
எழுதுவதற்குபெயர்தான் 
கவிதையா..?
*

ஆரம்ப காலகட்டத்தில் போதையேற்றக் கூடிய இலையைப் பயன்படுத்தி புகைவரச் செய்து நுகர்ந்தனர். புகைவரக் கூடிய அந்த இலைக்கு புகையிலை என்று பெயராயிற்று என்பர் ஆய்வாளர்கள். 

போர்த்துக்கல் நாட்டுக்கான பிரான்ஸ் தூதுவரான ஜான் நிக்கொட் என்பவர் 1559 ஆம் ஆண்டில் கத்தரீன் டி மெடிசியின் அரண்மனைக்கு நிக்கோடினை மருந்துப்பொருளாக அனுப்பி வைத்தார்.
நிக்கோடின் என்பது போதை வஸ்துவாய் இன்று புழக்கத்தில் உள்ளது.

நிக்கோடின் தடவப்பட்ட கம்பியால் யானையைக் குத்தினால்ää யானை தன் வீரியத்தை இழந்து உடனே மயங்கிவிடும். ஒரு சிகரெட்டில் மில்லிக்கிராம் அளவுதான் நிகோடின் உள்ளது. ஆனால் அதை தனியாகப் பிரித்து ஊசியால் உடலுக்குள் செலுத்தினால் நிக்கோடினின் நச்சுத் தன்னை உடனே உயிரைப் பறித்துவிடும். 
இழுக்க இழுக்க 
ஓன்றும் இல்லாதது
தெரிந்தே இருப்பினும்

விட முடியவில்லை
இந்த பாழாய்ப்போன
நிகோடின் குச்சிகளை!

என்று நிகோடினுக்கு அடிமையாய் போனவனின் மனநிலையை பதிவு செய்கிறார்.

இப்புத்தகத்தில்; உணர்வியல் சார்த்த கவிதைகளை ஒவ்வொரு பக்கத்திலும் காண முடிகிறது. வாசித்தலும் நேசித்தலும் கவிதையை அழகாக்குகின்றன.

No comments:

Post a Comment