Powered By Blogger

Tuesday, June 14, 2011

ஆறங்குல அழகிய வதமே

பல்லவி

ஆண்:
இரு இரு இரு கண்ணில் 
ஒரே ஒரே ஒரே மின்னல் 
காதல் மின்னஞ்சல்

ஐ லவ் யூ
ஹம் கியர் 
ஹம் டூ மீ
ஹம் டூ மீ 
ஹம் டூ மீ
ஹம் டூ மீ

ஆண்:
இரு இரு இரு கண்ணில் 
ஒரே ஒரே ஒரே மின்னல் 
அலை வீசிடும் நெஞ்சில் 
காதல் மின்னஞ்சல் 
காதல் மின்னஞ்சல்

பெண்:
சிறு பார்வையால்
சிதறலாய் - ஒளி
சிதறலாய்

ஆண்:
உயிர் வேர்களில் 
உதறினாய் - தீ
உதறினாய்

மழை நனைய வந்த வேளை நீ
வெய்யில் வீசி ஓடி ஒளிந்தாய்

ஆண்:
இரு இரு இரு கண்ணில் 
ஒரே ஒரே ஒரே மின்னல் 
அலை வீசிடும் நெஞ்சில் 
காதல் மின்னஞ்சல் 
காதல் மின்னஞ்சல்

ஓ.. 
ஹனி ஹனி ஹனி ஹனி நிலவே 
இனி மெனி மெனி மெனி சுகமே
நிதம் புது புது புது இரவே!

சரணம் - 1

ஆண்:
வெண்பனி 
வெயில் வீசிடும் மார்கழி
தேன்கனி 
ருசி ஊறிடும் நாக்கடி
 
பெண்:
எட்டிப் போக நீ
தேளாய் மாறி
கொட்டிப் போகிறாய் 
வா... வா..

கிட்ட வந்து நீ 
காற்றாய் மாறி 
தொட்டுப் பேசினாய்..
போ.. போ.. 
ஆண்:
ஆறங்குல அழகிய வதமே
உடை உடுத்தியே உலவிடும் வனமே

பெண்:
படர்கின்ற கொடியே
பற்றிக்கொள் பருவத்தின் செடியை
ரசித்தபடி இனி கடத்திடு எனையே

சரணம் - 2

பெண்:
ஆண்துணை
ஒரு பெண்ணின் பூவலை 
நீயெனை
வந்து தழுவிடும் நீர்நிலை

ஆண்:
செல்லக் கோபமும் 
கொண்டால் கூட
கொஞ்சல் நீளுதே
வா.. வா.. 

எல்லை மீறிடும்
கொண்டல் போலே
உள்ளம் நோகுதே
போ.. போ

பெண்:
மலர்தூவிய மன்மத மதனே
மன மஞ்சத்தை ஆழ்கின்ற யுவனே

ஆண்:
இனிக்கின்ற இதழே
இரவெல்லாம் இளமையின் மழையே
நனைந்தபடி உடல் நடக்கின்ற கடலா

No comments:

Post a Comment