Powered By Blogger

Saturday, February 26, 2011

கடவுள் வசிக்கிறார் சொற்களில்



ஆலய அர்ச்சனையை விட
ஓதுவார்கள் ஓதும் பாடலை விட
ரெம்பப் பிடிக்கும் கடவுளுக்கு
குழந்தைகளின் மொழிகள்..!


நமக்கோ
குழந்தைகள் பேசினால்
குமட்டல்
குழந்தைகள் கிறுக்கினால்
எரிச்சல்
குழந்தைகள் துள்ளினால்
தும்மல்
குழந்தைகள் விளையாடினால்
விக்கல்..!

பெரியவர்களை குழந்தைகளாக்கும்
குழந்தைகளை - நாம்
குழந்தையாய் பார்ப்பதில்லை.


குழந்தைகளை விட
தொலைக்காட்சிப் பெட்டிகளோடு
நெறுக்கம் அதிகம்


அவர்கள்
உதடுகள் உச்சரிக்க பொழியும்
பூமழையில் நனைந்து
மோட்சம் பெற
விரும்புவதில்லை நாம்.


மழையென்றால் குடைபிடித்தே
பழக்கப்பட்டவர்கள் நாம் தானே!

No comments:

Post a Comment