ஆலய அர்ச்சனையை விட
ஓதுவார்கள் ஓதும் பாடலை விட
ரெம்பப் பிடிக்கும் கடவுளுக்கு
குழந்தைகளின் மொழிகள்..!
நமக்கோ
குழந்தைகள் பேசினால்
குமட்டல்
குழந்தைகள் கிறுக்கினால்
எரிச்சல்
குழந்தைகள் துள்ளினால்
தும்மல்
குழந்தைகள் விளையாடினால்
விக்கல்..!
பெரியவர்களை குழந்தைகளாக்கும்
குழந்தைகளை - நாம்
குழந்தையாய் பார்ப்பதில்லை.
குழந்தைகளை விட
தொலைக்காட்சிப் பெட்டிகளோடு
நெறுக்கம் அதிகம்
அவர்கள்
உதடுகள் உச்சரிக்க பொழியும்
பூமழையில் நனைந்து
மோட்சம் பெற
விரும்புவதில்லை நாம்.
மழையென்றால் குடைபிடித்தே
பழக்கப்பட்டவர்கள் நாம் தானே!
No comments:
Post a Comment